மகிழ்ச்சிக் கடலில் 1999-2002 மாணவர்கள்

சுப்ரமணியம் கல்லூரியில் 1999-2002 ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவ-மாணவிகள் 20.10.2019 அன்று கல்லூரி வளாகத்தில் கூடி மகிழ்ந்தனர். தங்களது கல்லூரிக் கால நினைவுகளில் திளைத்தனர்.

இக்கல்லுரியில் பயின்ற மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாக தாளாளர் முனைவர் பழனியாண்டி அவர்கள் பெருமிதம் தெரிவித்தார்.